Tuesday, 24 February 2015

ஜபம் செய்வது எப்படி

ஜபம் செய்ய கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும். 108 மணிகளை கொண்ட ஜபமாலையை வலக்கை நடுவிரல்மேல் வைத்து இஷ்ட மந்திரத்தை கூறி பெருவிரலால் தள்ளி கணக்கிடவேண்டும். ஜெபிக்கும் போது மானசீகமாகவும் துணியால் மூடியும் ஜபித்தால் வேண்டும். வீடுபேற்றை விரும்புவோர் மேல்நோக்கி தள்ளவேண்டும் .இவ்வுலக சுக போகங்களை விரும்புவோர் கீழ்நோக்கி தள்ளவேண்டும்.ஜபம் முடிந்த பிறகு அம்மாலையை அணிந்து கொள்ளலாம்.அல்லது ஒன்று தனியாக வைத்திருந்தால் உரிய இடத்தில் வைத்துவிடவேண்டும்.
* வெறும் விரல்களால் எண்ணி ஜபம் செய்தால் ஒரு பங்கு
பலனே ஏற்ப்படும்.
* விரல்களின் ரேகை கணுக்களை எண்ணி ஜபம் செய்தால்
8 பங்கு பலன் கிடைக்கும்
* சங்கு மணி கொண்டு ஜபம் செய்தால் 108 மடங்கு பலன்
கிடைக்கும்
* முத்துமணிகளால் 300 மடங்கு பலன்
* தாமரை மணிகளால் 1000 மடங்கும்
* ஸ்படிக மணிகளால் 30,000 மடங்கும்
* தர்ப்பை புல் முடிச்சுகளை எண்ணி ஜபம் செய்தால் கோடி
பங்கு பலன்
* இவைகளை விட சிறந்த உருத்திராக்க மணி
மாலையால் ஜபம் செய்தால் அளவிடமுடியாத கோடி
கோடியாய் புண்ணியபலன் கிடைக்கும் .

No comments: