Tuesday, 24 February 2015
பூஜை அறை எப்படி அமைக்கவேண்டும்.
*ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழ க்கில் அல்லது தென் மேற்கில்,அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும்.
*கீழ்வீட்டிலும்,மாடியிலும் ஒரே குடும்பத்தவர் வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.
*பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார் த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும்.
*பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்த ளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.
*தென் – கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.
*பூஜை அறையில் காலஞ்சென்ற முன்னோர்களின் புகைப் படங்களை எக்காரணம் கொண்டும் வைக்கக் கூடாது.
*பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும்.
*இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமை யல் அறை சுவர்களில் உள்ள அலமாரிக ளை பூஜை அறையாக பயன்படுத்தினால் வழி படும் நேரம் தவிர அந்த அலமாரியை கதவு அல்லது திரைச்சீலையால மூடி வைக்க வேண்டும்.
*பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப் புற மாக திறக்கும்படி இருக்க வேண்டும்.
*ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது.
*பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment