Good project management is not so much knowing what to do and when, as knowing what excuses to give and when.
உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒன்று: இன்னொருவரைப் பற்றிக் கவலைப்படாமல் மாங்கு மாங்கு என்று தன் வேலையை (மட்டும்)பார்க்க வேண்டும் என்ற மனோபாவம் கொண்டவர்கள். இன்னொன்று, தான் வேலை செய்யாமல் பிறரை நிர்வாகம் மட்டும் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள். இந்த இரண்டு வேலைகளில் எது சுலபம் எது கடினம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்லுவார்கள். மேனேஜரைக் கேட்டால் பத்து பேரை கட்டி மேய்க்கும் வேலை தான் சவாலானது என்று சொல்வார். தொழிலாளியைக் கேட்டால்
'அவரை ஒருநாள் நாங்கள் செய்யும் வேலையை செய்து பார்க்கச் சொல்லுங்க; அப்ப தான் எங்க கஷ்டம்புரியும்' என்று சொல்வார்கள்.
மேனேஜரைப் பற்றி கேலியாக இப்படி சொல்வார்கள் 'ஒரு பெண் ஒன்பது மாதத்தில் ஒரு குழந்தையைப் பெற்றால் ஒன்பது பெண்கள் சேர்ந்து ஒரு மாதத்தில் ஒரு குழந்தையைப் பெற முடியும் என்று நினைப்பவர்' ...மேலும், you can relax and take your own time..but make sure that the work is completed before this Friday!?! போன்ற அருமையான அர்த்தம் பொதிந்த வாசகங்களை உதிர்ப்பது மேனேஜர்களுக்கு மட்டுமே கைவந்த கலை.
ஆனால் நிர்வாகம் செய்வது என்பது ஆடுகளை மேய்ப்பது போல சுலபமான வேலை அல்ல. ஏனென்றால் ஆடுகள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும். ஒன்றுக்குப் பின் ஒன்று வசியம் செய்து விட்டது போல சமர்த்தாக நடக்கும்.ஆனால் மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்.ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம், ஒவ்வொருவருக்கும் ஒரு குணம்!மேலும் இப்போதெல்லாம் தினம் பதினாறு மணிநேரம் வேலை வாங்கும் அடிமைமுறை நடைமுறையில் இல்லை. கொஞ்சம் ஏதாவது மாறுதலாக சொல்லிவிட்டாலே மோப்பக் குழையும் அனிச்சம் போல H .R இடம் போட்டுக் கொடுத்து விடுவார்களோ SKIP LEVEL MEETING வைத்து விடுவார்களோ என்று மேனேஜர்களும் இன்று பயப்பட வேண்டி இருக்கிறது.மேனேஜருக்கு கஸ்டமரிடம் பதில் சொல்ல வேண்டும்;திடீரென்று வந்து நாலுநாள் லீவ் கேட்கும் ஆளை Handle செய்ய வேண்டும். அடுத்த ரிலீசுக்கு Resource Management செய்யவேண்டும்;எதிர்பார்க்காமல் வந்து ரிசைன் செய்யும் ஆளுக்கு back -up பிளான் இருக்க வேண்டும்.இப்படி எத்தனையோ!
ஆனால் நிர்வாகம் செய்வது என்பது ஆடுகளை மேய்ப்பது போல சுலபமான வேலை அல்ல. ஏனென்றால் ஆடுகள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும். ஒன்றுக்குப் பின் ஒன்று வசியம் செய்து விட்டது போல சமர்த்தாக நடக்கும்.ஆனால் மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்.ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம், ஒவ்வொருவருக்கும் ஒரு குணம்!மேலும் இப்போதெல்லாம் தினம் பதினாறு மணிநேரம் வேலை வாங்கும் அடிமைமுறை நடைமுறையில் இல்லை. கொஞ்சம் ஏதாவது மாறுதலாக சொல்லிவிட்டாலே மோப்பக் குழையும் அனிச்சம் போல H .R இடம் போட்டுக் கொடுத்து விடுவார்களோ SKIP LEVEL MEETING வைத்து விடுவார்களோ என்று மேனேஜர்களும் இன்று பயப்பட வேண்டி இருக்கிறது.மேனேஜருக்கு கஸ்டமரிடம் பதில் சொல்ல வேண்டும்;திடீரென்று வந்து நாலுநாள் லீவ் கேட்கும் ஆளை Handle செய்ய வேண்டும். அடுத்த ரிலீசுக்கு Resource Management செய்யவேண்டும்;எதிர்பார்க்காமல் வந்து ரிசைன் செய்யும் ஆளுக்கு back -up பிளான் இருக்க வேண்டும்.இப்படி எத்தனையோ!
No comments:
Post a Comment