விமானப்பயணம் புதிதாக போகிறவர்களுக்கு ஆச்சர்யப்பயணம் அடிக்கடி போகிறவர்களுக்கு சலிப்பான பயணம் ஆனால் இந்த இருவருக்கும் ஏற்படும் திகிலான பயணமும் இருக்கிறது
அதைப் பற்றித்தான் கூறப்போகிறேன்.


இந்த முறை ஊருக்கு வந்துவிட்டு திரும்ப சிங்கப்பூர் (இரவு) செல்லும் போது மீண்டும் ஒரு முறை எனக்கு உயிர் பயத்தைக் காட்டி விட்டது. சென்னையில் தற்போது மழை பெய்து கொண்டு இருப்பதால் சீதோஷ்ண நிலை காரணமாக ஆடிய ஆட்டத்தில் அடி வயிறு எல்லாம் கலங்கி விட்டது. நான் அடுத்த நாள் அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால் விமானம் கிளம்பும் முன்பே தூங்கி விட்டேன். விமானம் கிளம்பும் போது அதிர்வில் லேசாக விழித்து பின் அரைத்தூக்கத்தில் இருந்தேன்.
ஐந்து நிமிடம் தான் இருக்கும் விமானம் கிளம்பி “தடக்” னு கீழே இறங்கியது. உதாரணத்துக்கு சீரான சாலையில் சென்று கொண்டு இருக்கும் போது நாம் செல்லும் பேருந்து பள்ளத்தில் திடீரென்று இறங்கினால் உங்களுக்கு எப்படி இருக்கும் அது மாதிரி. இது தரையில ஆனா பரவாயில்லைங்க வானத்துல ஆனா! எனக்கு தூக்கி வாரிப்போட்டு விட்டது. இது வரை என் பயணங்களில் இந்த அளவிற்கு இறக்க அதிர்வை நான் கண்டதில்லை. சரி ஆகிவிடும் என்று இருந்தால் ஒரு பத்து நொடிக்கு நம்ம சென்னை சாலையில் போகிற மாதிரி கடக் புடக்குனு மேலே கீழே இறங்கி ஆடிய ஆட்டத்தில் என் மனைவி பயத்தில் வீல் என்று கத்தி விட்டார். இந்த சமயங்களில் பத்து நொடி என்பது பத்து நிமிடம் போல நமக்குத் தெரியும்.
நான் என்ன பண்ணினேன் என்று கேட்கறீங்களா! குருதிப்புனல் படத்துல கமல் என்ன சொல்லி இருக்காரு “வீரம்னா பயமில்லாத மாதிரி காட்டிக்கிறது” னு அதை அப்படியே பின்பற்றி நான் பயக்காத மாதிரி உட்கார்ந்து இருந்தேன்
இது வரைக்கும் நல்லாத்தான் போச்சு!! இதன் பிறகு நடந்து வந்து கொண்டு இருந்த பணிப்பெண் விமானம் ஆடிய ஆட்டத்தில் நடக்க கூடாது என்ற விதிமுறைக்கு ஏற்ப அப்படியே என் அருகில் தரையில் உட்கார்ந்து கொண்டார். இது கூட எனக்கு பயமில்ல ஆனால் உட்கார்ந்ததோட இல்லாமல் கடவுளை வேண்டுச்சு பாருங்க அங்க தான் பீதியாகிட்டேன்.

பொதுவா பணிப்பெண்களுக்கு இது போல சம்பவங்கள் ரொம்ப சகஜம் இதை விட ஆட்டத்தை எல்லாம் பார்த்து இருப்பாங்க அதனால் அவங்க பயப்பட மாட்டாங்க ஆனா அந்தப்பெண்ணே பயப்பட்டு கடவுளை வேண்டியதும் எனக்கு கலவரமாகி விட்டது. ஆஹா! நம்மை நேரா மேலேயே கூட்டிட்டு போய்டுவாங்க போல இருக்குன்னு. இதன் பிறகும் ஆட்டம் நிற்கவில்லை. சும்மா கட்ட வண்டில போகிற மாதிரி டக்குனு கீழே இறங்குது வலது பக்கம் போகுது இடது பக்கம் போகுது நமக்கு சங்கு தான் போல இருக்குனு செம பயமாகி விட்டது.
நாங்க மூன்று பேர் இருக்கையில் அமர்ந்து இருந்தோம் ஜன்னல் பக்கம் என் மனைவி, நான் நடைபாதை பக்கம், என் மகன் என் மனைவியின் மடியில் தலை வைத்து என் மீது கால் வைத்து நடுவில் படுத்து இருந்தான். விமானத்தில் இருக்கிறவங்க எல்லாம் பயத்துல இருக்காங்க என் பின்னாடி இருந்த ஒரு பொண்ணு (ஆண்ட்டி!) அவர் அருகில் இருந்தவரை கட்டிபிடித்துட்டு கீச் கீச் னு கத்திட்டு இருக்கு. முன்னாடி இருக்கிறவங்க எல்லாம் பேய் அடிச்ச மாதிரி திருதிருன்னு பார்த்துட்டு இருக்காங்க. இவன் “அப்பா இந்த ப்ளைட் சரி இல்ல ரொம்ப ஆடுது நாம் அன்னைக்கு வந்த ப்ளைட் தான் நல்லா இருந்தது” ன்னு சொல்லிட்டு இருக்கான். அடேய்! இரண்டுமே ஒரே ப்ளைட் தாண்டா! இங்க ரணகளமே நடந்துட்டு இருக்கு இவன் என்னடான்னா இப்படி சொல்றான் என்ன நடக்குது என்று தெரியாமல். சரி! இளங்கன்று பயமறியாது.
இது ஒரு காமெடின்னா இன்னொன்று அதை விட மெகா காமெடி ஒன்று நடந்தது.. நம்ம ஆளுங்களுக்கு விமான நிலையத்தில் இருக்கும் வரை எதுவும் வராது ஆனால் விமானம் ஏறியதும் தான் எல்லாம் வரும். வழக்கம் போல ஒருத்தரு விமானம் கிளம்பி கொஞ்ச நேரத்துலையே டாய்லெட்க்குள்ள போயிட்டாரு இவர் உள்ளே போய் ஒரு இரண்டு நிமிசத்தில் இந்த ஆட்டம். சும்மாவே ஆட்டம் பயங்கரமா இருக்கு இவர் இருந்த டாய்லெட் விமான டாய்லெட் என்பதால் இரண்டடிக்கு இரண்டி தான் இருக்கும் சும்மா குலுக்கு குலுக்குனு குலுக்கி இருக்கும் கதவுல எல்லாம் மோதி இருப்பாரு
என்னடா ஒண்ணும் சத்தத்தையே காணோமே என்று இருந்தால் கொஞ்சம் ஆட்டம் குறைந்த பிறகு தடதட னு அலறி அடித்துட்டு வெளியே ஓடி வராரு. ஹா ஹா எனக்கு அந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.

கண்டிப்பா விமானம் கவிழ்ந்து விட்டது என்றே உள்ளே நினைத்து இருப்பார் சிறிய இடம் என்பதால் உள்ளே அங்கே இங்கே மோதி இருப்பார். நான் பயத்தோடு உட்கார்ந்து இருந்தேன் பின் கொஞ்ச நேரத்தில் சரி ஆகி விட்டது அதன் பிறகு தான் மேட்டரு நம்ம ஆளு மறுபடியும் உள்ளே போயிட்டாரு. ஹா ஹா ஹா பாதியிலேயே வந்துட்டாரு போல பயத்துல. எனக்கு இப்ப நினைத்தாலும் சிரிப்பா இருக்கு.
அப்புறம் கண்ணை மூடி தூங்கிட்டேன் . நடுவுல நம்ம பணி ஆண்!! Excuse Me Sir! Do you want veg or non Veg னு கேட்டார்.. யோவ்! ஏற்கனவே கலக்கி இருக்கு இதுல இது வேறயா ஆளை விடுன்னு No Thanks சொல்லிட்டேன். Are you sure Sir னு விடாம கேட்கிறார்.. ஆமாய வேண்டவே வேண்டாம் னு கண்ணை மூடியவன் அதன் பிறகு சிங்கப்பூர் வந்த பிறகு தான் கண்ணைத் திறந்தேன். வீட்டுக்கு வந்த பிறகு மனைவியிடம் அதன் பிறகு விமானம் ஆடுச்சா ன்னு கேட்டேன்.. ஆமா… நீங்க என்ன கண்ணை மூடித் தூங்கிட்டீங்க! அதன் பிறகும் ஆடிட்டே இருந்தது பயத்துல நான் தூங்கவே இல்லை என்று கூறினார் 

நன்றி http://www.giriblog.com
No comments:
Post a Comment