Tuesday, 7 April 2015

ஒன்பது அடிப்படை இந்து நம்பிக்கைகள்



எங்கும் வியாபித்திருக்கும் கடவுள்
ஓர் உச்சப்பரம்பொருள் ஒன்று, அனைத்துள்ளும் ஊடுருவியும் கடந்தும் நின்று, படைக்கும் பொருளாகவும், தோன்றாத உண்மையாகவும் இருப்பதை இந்துக்கள் நம்புகின்றனர்.
வெளிப்படுத்தப்பட்ட மறைநூட்களுக்கு மதிப்பு
உலகத்தின் மிகத் தொன்மையான மறைநூட்களான வேதங்களின் தெய்வீகத்தை இந்துக்கள் நம்புகின்றனர், மற்றும் ஆகமங்கள் சரிநிகராக வெளிப்படுத்தப்பட்டதாகப் போற்றுகின்றனர். இந்த ஆதி தோத்திரங்கள் கடவுளின் வார்த்தையும், ஆதியந்தமில்லாத மதமாகிய சனாதன தர்மத்தின் அடித்தளமும் ஆகும்.
மூன்று உலகங்களும் படைப்பின் சுழற்சியும்
பௌதீகம்,சூக்குமம்,காரணம் என்ற மூன்று உலகங்கள் தோற்றத்தில் இருப்பதையும், இந்த பிரபஞ்சம் படைப்பு, காப்பு, அழிப்பு என முடிவில்லாத சுழற்சியில் உழல்வதையும் இந்துக்கள் நம்புகின்றனர்.
கர்மம் மற்றும் தர்மம் சட்டவிதிகள்
காரண காரியச் சட்டமாகிய கர்மவினையை இந்துக்கள் நம்புகின்றனர். இச்சட்டத்தின் மூலம் தனிமனிதன் ஒருவன் தன் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலமாக தனது எதிர்காலத்தை தானே உருவாக்கிக் கொள்கின்றான்.
மறுபிறவியும் வீடுபேறும்
ஆத்மா மறுபிறவி எடுப்பதையும், அது பலப் பிறவிகளில் பரிணாமித்து, எல்லா கர்மவினைகளும் தீர்ந்துபோய், மோட்சம் கிட்டும்பட்சத்தில் மறுபிறவியிலிருந்து விடுதலை எய்துவதையும் இந்துக்கள் நம்புகின்றனர். இந்த இறுதி அடைவிலிருந்து எந்த ஓர் ஆத்மாவும் நிரந்தரமாக ஒதுக்கி வைக்கப்படமாட்டாது.
கோயில்களும் உள்உலகங்களும்
பார்க்கவியலாத உலகங்களில் தெய்வங்கள் உறைவதையும், கோயில் வழிபாடு, சடங்கு, சம்ஸ்காரங்கள் மற்றும் சுய பக்தியால் இந்த தேவர்கள் மற்றும் தெய்வங்களிடம் தொடர்பை உருவாக்க முடியும் என இந்துக்கள் நம்புகின்றனர்.
சற்குருவால் வழிகாட்டப்பட்ட யோகம்
கடந்த நிலையில் இருக்கும் பரம்பொருளை அறிந்துக் கொள்வதற்கு ஞானஒளிப் பொருந்திய ஆசிரியர் ஒருவர் (சற்குரு) தேவையெனவும், சுய ஒழுக்கம், நன்னெறி, தூய்மைச்செறிதல், யாத்திரை, சுய கேள்வி, தியானம் மற்றும் கடவுளிடம் சரணாகதி போன்றவையும் அவசியம் என இந்துக்கள் நம்புகின்றனர்.
கருணையும் தீங்கிழையாமையும்
அனைத்து உயிர்களும் புனிதத்தன்மை வாய்ந்தவை என்பதால் அவை மதித்தும் அன்பு செலுத்தப்படவும் வேண்டும் என இந்துக்கள் நம்புகின்றனர். ஆகையால் அகிம்சை செயல்படுத்தப்பட வேண்டும், அதாவது எண்ணம், வார்த்தை மற்றும் செயல்களால் தீங்கிழையாமல் இருத்தல்.
எல்லா நம்பிக்கைகளுக்கும் மெய்மரியாதை மற்றும் மதிப்பு
விமோச்சனத்திற்கு ஏனைய மற்ற மதங்களை விட தனிப்பட்ட எந்தவொரு தனி மதமும் ஒரே வழிப்பாதையாக இருப்பதில்லை. உண்மையான எல்லா பாதைகளும், கடவுளின் தூய அன்புக்கும் ஒளிக்கும் ஆன முகப்பு ஆதலால் சகிப்புத் தன்மையும் புரிந்துணர்வும் தேவையென இந்துக்கள் நம்புகின்றனர்.

No comments: