Tuesday, 7 April 2015

அரிசி

‪#‎உலகின்‬ பழமையான தானியம் அரிசி.கிடைத்திருக்கும் சாண்றுகளை வைத்து பார்க்கும் பொழுது 12 ஆயிரம் ஆண்டுகளாக அரிசி உணவாக இருந்திருக்கும் பொழுது அப்பொழுது வராத சர்க்கரை நோய் இப்பொழுது வந்தது ஏண்...?
‪#‎கிட்டதட்ட‬ 4 இலட்சம் வகை அரிசிகள் இருந்த இப்பேரண்டத்தில் இப்பொழுது விரல் விட்டு எண்ணும் அளவுக்கே அரிசி வகைகள் இருக்கின்றன.
‪#‎அரிசி‬ நம் மரபணுக்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளாக பரிச்சையமான உணவு ஆகும்.இத்தகைய பரம்பரை அரிசி வகையை தொலைத்து அதிக மகசூலுக்காக ,அதிக சேமிப்பு,கொள்ளை இலாபம் என்கிற நோக்கத்திற்க்காக அரிசியில் பாலீஸ் இரகங்களை உருவாக்கியதுதான் முதல் பிரச்சனை துவங்கியது.
‪#‎அரிசியைத்‬ தீட்டும் வழக்கம் ஆங்கிலேயர் களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பழுப்பு நிற அரிசியை பரிசுத்த வெள்ளை ஆக்கிவிட வேண்டும் என்கிற வெறியில் அவர்கள் அதைத் தீட்டினார்கள். முதலில் 2% தீட்டினார்கள். பின்னர் 5% தீட்டினார்கள். இப்போது இந்திய விற்பனையாளர்களால் ,12% தீட்டப்படுகிறது. விளைவு - இன்றைய அரிசி மல்லிகைப் பூபோல வெண்மையாகக் கிடைக் கிறது. இதன் மற்றொரு விளைவு - ஏற்கெனவே சத்துக்கள் இழந்த வெள்ளை அரிசி, தற்போது அத்தனை சத்துக்களையும் மொத்தமாக இழந்து, வெறும் சர்க்கரைப் பண்டமாக மாறிவிட்டது.
1963-ல் நம் நாட்டில் வெறும் ஏழு ரப்பர் - ரோலர் அரிசி மில்கள்தான் இருந்தன. இதுவே 1999-ல் 35,088 மில்களாக அதிகரித்தன. தற்போது இன்னும் பெருகி, அரிசியை அரைத்துத் தள்ளு கின்றன. சர்க்கரை நோயின் தாக்கமும் இதே வேகத்தில் அதிகரித்து வருகிறது.
‪#‎பூ‬ வச்சி பொட்டு வச்சி,சிலுக்கு பாலீஸ் போட்டு அழகு படுத்த அரிசி என்ன சினிமாவில் நடிக்கவா வந்தது..?
‪#‎இரண்டாவது‬ பிரச்சனை தமிழகம் பெரும் தன்னிறைவாக நெடுங்காலமாக அரிசி உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தது,அதை உடைக்க இந்தியத்தால் திணிக்கப்பட்டது கோதுமை,
‪#‎கோதுமை‬ சாப்பிட்ட வட இந்தியர்களுக்கு சர்க்கரை இல்லையென எந்த ஆங்கில மருத்துவனாலும் உறுதி படுத்த முடியுமா...?
‪#‎அரிசியை‬ உணவாக கொண்ட தமிழ் நாட்டில் மட்டுமா சர்க்கரை நோய் இருக்கிறது ,,?
சிந்தியுங்கள் உண்மையை அறிய..
‪#‎அரிசியில்‬ அறிவியல் கலோரிக் கணக்கு என்ன தெரியுமா..?
கார்போ கைட்ட்ரேட் -70 %
புரதம் -6-7 %
நார்ச் சத்து -12-13 %
நீர் மற்றும் கால்சியம்,மக்னீசியம் முதலான கனிமங்கள் கோதுமையில் இருப்பது போல தான் அரிசியிலும்..
‪#‎புரத‬ அளவும்,கார்போ கைட்ட்ரேட் அளவும் கொஞ்சம் கூடுதலாக இருப்பதை வைத்து அரிசியை விட கோதுமை உயர்ந்தது என்ற எண்ணத்தை உருவாக்குகின்றனர் தமிழக வாழ்வாதாரத்தை முடக்கி இந்திய சந்தையை பெருக்க முற்படும் கயவர்கள்..
‪#‎அரிசியுடன்‬ போதிய அளவு பருப்பு,கீரை,காய்கள்,இறைச்சிகள் சேர்த்து உண்ணும் பழக்கம் நம்முடையது.அதனால் நம் உடலை இவர்கள் காட்டும் மந்த நிலையில் இருந்து காப்பாற்றவே செய்கிறது.நமது பாரம்பரிய முறைகள்.
‪#‎குளிர்‬ பிரதேசங்களில் பயன்படுத்தப்படும் கோதுமை ஒரு பொழுதும் நமக்கான உணவாக மாற வாய்ப்பே இல்லை.
‪#‎மாறாக‬ கோதுமையை உணவாக உண்ணும் பலருக்கு மூலம்,மலச் சிக்கல்,தோல் நோய் வரும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
‪#‎உடலுக்கு‬ ஊட்டம் அளிக்கும் மாப்பிள்ளை சம்பா,
‪#‎பிரசவத்திற்குப்‬ பின் பால் சுரக்க அதிகம் பயன்படும் நீலச்சம்பா,குழியடிச்சான் அரிசி இரகங்கள்
‪#‎மொறுமொறுக்கும்‬ மணப்பாறை முறுக்கின் இரகசியம் -கல்லிமடையான் இரக அரிசி
‪#‎கைக்‬ குழந்தை பாலில் இருந்து திட உணவிற்கு மாறும் தறுவாயில் உடைத்த அரிசிக் குருணை,பாசிபருப்பு சேர்த்த குழைந்த கஞ்சி,இவற்றுடன் தேங்காய் எண்ணெய் விட்டு குழந்தைக்கு ஊட்டினால் சீராக உடல் எடை ஏறும்,7 மாத குறை பிரசவக் குழந்தைகளுக்கு இதுவே சரியான உணவு
குழந்தைக்கு -பச்சரிசி,
இளையோருக்கு - புழுங்கல்
முதியவருக்கு -அவல்
‪#‎பழம்‬ தமிழர் உணவுகள் தினைச்சோறு, சாமைச்சோறு, வரகரிசிச் சோறு,உழுத்தம் சோறு, வெண்சோறு, கம்பஞ் சோறு, மூங்கில் அரிசிச் சோறு, நீர்ச் சோறு, குறுணி அரிசிச் சோறு, கூட்டாஞ் சோறு, என பல்சுவைப் பட்டதாக இருந்திருக்கின்றன.
‪#‎கைக்குத்தல்‬ அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பாலீஷ் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டைவரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது.
நாட்டரிசி, மொட்டைக கறுப்பன் அரிசி, வவுனியா அரிசி, வரணி அரிசி, தம்பலகாமம் வயல் நெல் அரிசி, இறத்தோட்டை வயல் நெல்
குழியடிச்சான் சம்பா,
மாப்பிள்ளை சம்பா,
குடவாலை சம்பா,
கல்லுண்டை சம்பா,
கவுனி அரிசி,
ஆற்காடு கிச்சடி,
வையக்குண்டா,
குதிரைவால்,
தங்கச்சம்பா,
டொப்பிச்சம்பா,
சீரகச்சம்பா,
ஆனைக்கொம்பன்,
கார்சம்பா,
கார்த்திகைச்சம்பா,
ஆத்தூர் கிச்சடி,
சிறுகமணி,
செங்காரி,
பூனைக்காரி,
கட்டைச்சம்பா,
பிசாளம்,
கருப்பு கவுணி,
சிவப்புக் கவுணி,
கருடன் சம்பா,
வாலான் சம்பா,
கள்ளக்கார்,
மூங்கில் அரிசி,
கொழியல் சம்பா,
கருங்குருவை,
காட்டுயானம்....
போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் நமக்கு சரியான உடல் வழுவை,நோயற்ற வாழ்வை குறைப்பன...
நல்ல உடல் உழைப்பு,உடற்பயிற்சிகளே அரோக்கியமான உடலுக்கு தேவையானவை.
‪#‎சிறு‬ தானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், வாகு, மக்காச்சோளம், பனிவரகு,சாமை,தினை ,குதிரைவாலி போன்ற தானியங்களை நமது உணவில் தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலமும் நாம் கட்டுறுதியாக வாழலாம்...

1 comment:

PSK SIDDHA said...

வணக்கம் நான் சித்தமருத்துவர் ப.சரவணகுமரன், மேற்கண்ட நெல்லின் விதைகள் கிடைக்குமா தொடர்புக்கு 7871609877