Wednesday, 4 March 2015

மாசி மகம்

மாசி மகம் நன்னாளில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வரும் மகா மகம் கொண்டாடப் பெறும். 
இன்று, இது இள மகாமகம் என்று அழைக்கப் படுகிறது!
மகாமக தீர்த்தக் குலக் கரையில் அமைந்த காசி விஸ்வநாதர், காசியில் இருப்பது போலவே, மேற்றளீஸ்வரர்! மேற்க்கே பார்த்து அமர்ந்த சிவம்.
மிக விசேஷம். இந்தக் கோவிலில், விசாலாக்ஷி அம்மையுடன், காசி விஸ்வநாதர் ஒரே சன்னதியில் இரண்டு கருவறைகளில் அருள்கிரார்கள்!
அதோடு, புண்ய நதி மாதாக்களான கங்கை, யமுனை,
சரஸ்வதி நர்மதா, காவேரி ,கோதாவரி, துங்க பத்ரா, கிருஷ்ணா, சரயு
என்று அத்தனைபேரும் ஒரே சன்னதியில் அருள்கிறார்கள்!
காவிரியின் நேரப் பார்வையில் மகாமக குளம் இருக்கிறது!
மகாமகத்தன்று இத்தனை பேரும் எதிரிலுள்ள குளத்தில் நீராடித் தம்மிடம் மனிதர்களால் சேர்ந்த பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். அனைத்து நதி மாதாக்களையும் இந்த மாசி மகா தினத்தில் வணங்கி என்றும் நமக்கு தண்ணீர்ப் பஞ்சம் வரக் கூடாது என்று வேண்டுவோம்! 

No comments: