சுற்றுச் சூழல் அமைப்புகள் என்னதான் போராட்டம் நடத்தினாலும் காடுகள் அழிந்து கனிம சுரங்கங்களாகவும், கட்டிடங்களாகவும் தொழிற்சாலைக ளாகவும் உருமாறுவதை தடுக்க முடியாது. அது காலத்தின் கட்டாயம். ஆனால், பெருகி வரும் வாகனங்கள், அதிகரித்து வரும் தொழிற்சாலைக ளால் ஏற்படும் புகை, மாசுக்கு இடையில், அதை குறைக்கும் மரங்கள் அழிந்து வருவது கவலை அளிக்கிறது.
நாடு முழுவதும் உள்ள காடுகளின் அளவு 367 சதுர கி.மீ. அளவுக்கு குறைந்துள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது. காடுகளின் பரப்பளவை அதிகரிக்க டென்மார்க் உதவியுடன் சமூக காடுகள் என்ற பெயரில் அரசு புறம்போக்கு நிலங்களில் காடுகள் உருவாக்கப் பட்டன. தமிழ்நாடு, பஞ்சாப், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்களில் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் காடுகளின் பரப்பளவு அதிகரித்துள் ளது. உதாரணமாக, பஞ்சாபில் இரண்டே ஆண்டுகளில் 100 சதுர கி.மீ. அளவுக்கு புதிய காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் வட கிழக்கு மாநிலங்களில் முந்தைய இரண்டு ஆய்வுகளின்போது, 299 சதுர கி.மீ. அளவுக்கு அதிகரித்து இருந்த காடுகளின் பரப்பளவு, லேட்டஸ்ட் ஆய் வில் குறைந்துள்ளது. மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், அருணாச்சல் பிரதேசம், மேகாலயா மாநிலங்களில் ஏறக்குறைய 550 சதுர கி.மீ. காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய இழப்பாகும். தீவிரவாதிகள் பாதிப்பு நிறைந்த மணிப்பூரில்தான் பாதிப்பு அதிகம். 190 சதுர கி.மீ. காடுகள் மாயமாகியுள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மக்களும் பழங்குடியினரும் காடுகளை எரித்து பயிர் செய்வது அதிகரித்துள்ளது. அதோடு இந்த பகுதிகளில் மரங்களை வெட்டிக் கடத்தும் மாபியா கும்பலின் ஆதிக்கமும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அடர்ந்த மரங்கள் இருந்த காடுகள், கட் டாந்தரையாகி வருகின்றன. விவசாயத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால், வயல்கள் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. ஆள் கிடைக்காததாலும் கூலி உயர்வு காரணமாகவும் ஆண்டுக்கு முப்போகம் பார்த்த வயல்கள் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. வயல்கள், காடு கள் அழிவதால், பூமி வெப்பம் அதிகரிக்கிறது. இதனால் கடும் வெப்பம், அதிக பனிப்பொழிவு ஏற்படுகிறது. இருக்கும் காடுகளை காப்பதும் மரம் வளர்ப்பதும் ஒரு இயக்கமாக மாற வேண்டும். அப்போதுதான் காடுகள் பெருகும். நன்றி தினகரன் 1/9/2012 1
நாடு முழுவதும் உள்ள காடுகளின் அளவு 367 சதுர கி.மீ. அளவுக்கு குறைந்துள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது. காடுகளின் பரப்பளவை அதிகரிக்க டென்மார்க் உதவியுடன் சமூக காடுகள் என்ற பெயரில் அரசு புறம்போக்கு நிலங்களில் காடுகள் உருவாக்கப் பட்டன. தமிழ்நாடு, பஞ்சாப், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்களில் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் காடுகளின் பரப்பளவு அதிகரித்துள் ளது. உதாரணமாக, பஞ்சாபில் இரண்டே ஆண்டுகளில் 100 சதுர கி.மீ. அளவுக்கு புதிய காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் வட கிழக்கு மாநிலங்களில் முந்தைய இரண்டு ஆய்வுகளின்போது, 299 சதுர கி.மீ. அளவுக்கு அதிகரித்து இருந்த காடுகளின் பரப்பளவு, லேட்டஸ்ட் ஆய் வில் குறைந்துள்ளது. மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், அருணாச்சல் பிரதேசம், மேகாலயா மாநிலங்களில் ஏறக்குறைய 550 சதுர கி.மீ. காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய இழப்பாகும். தீவிரவாதிகள் பாதிப்பு நிறைந்த மணிப்பூரில்தான் பாதிப்பு அதிகம். 190 சதுர கி.மீ. காடுகள் மாயமாகியுள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மக்களும் பழங்குடியினரும் காடுகளை எரித்து பயிர் செய்வது அதிகரித்துள்ளது. அதோடு இந்த பகுதிகளில் மரங்களை வெட்டிக் கடத்தும் மாபியா கும்பலின் ஆதிக்கமும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அடர்ந்த மரங்கள் இருந்த காடுகள், கட் டாந்தரையாகி வருகின்றன. விவசாயத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால், வயல்கள் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. ஆள் கிடைக்காததாலும் கூலி உயர்வு காரணமாகவும் ஆண்டுக்கு முப்போகம் பார்த்த வயல்கள் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. வயல்கள், காடு கள் அழிவதால், பூமி வெப்பம் அதிகரிக்கிறது. இதனால் கடும் வெப்பம், அதிக பனிப்பொழிவு ஏற்படுகிறது. இருக்கும் காடுகளை காப்பதும் மரம் வளர்ப்பதும் ஒரு இயக்கமாக மாற வேண்டும். அப்போதுதான் காடுகள் பெருகும். நன்றி தினகரன் 1/9/2012 1